அன்பு நண்பர்களே வணக்கம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு சார்பில் ஏழைகளுக்கு (குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு)ஈரமாவு அரவைப்பொறி(Wet Grinder) வழங்குவதற்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதால் கோவையில் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் இலவச கிரைண்டர் திட்டத்திற்கு உள்நாட்டிலேயே கிரைண்டர் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், கிரைண்டர் திட்டத்திற்கு சீன கிரைண்டர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.
மின்சாரத்தால் இயங்கக்கூடிய கிரைண்டரை கண்டுபிடித்தவர் திரு.சபாபதி என்கிற கொஙகுநாட்டார்.மேலும் இதற்க்கு தேவையான உதிரிபாகங்கள்
Stainless steel Drum
Motor and Gear Box covered with Stainless SheetsM.S. Bottom Frame
Hard Chrome Plating for the arm set
இவை அனைத்துக்கும் குடிசைதொழில்போல் பரவியுள்ளதில் என்னற்ற மக்கள் சார்ந்துள்ளனர்.
குறைந்தபட்சம் பத்து இலட்சம் கிரைண்டர் வழங்கினால் அதில் பாதிஅளவுதான் தமிழ்நாட்டில் தயாரிக்கமுடியும் எனில் அதனை தமிழகத்திலேயே கொள்முதல் செய்யலாமே!
மேலும் அனைத்தும் சீனாவில் வாங்கினால் குறைந்தது ஒருவருடம் நன்றாக் இயங்கினாலே அரிது,சீனாவின் தரம் உலகம் அறிந்தது,ஆனால் கோவையின் கிரைண்டர் உலக தரம்வாய்ந்தது,உலகின் பல்வேறு நாடுகளுக்கு இன்றள்வும் ஏற்றுமதியாகின்றன.சீன கிரைண்டரை மக்கள் பயன்படுத்தும் காலம் வரை உள்நாட்டு தயாரிப்பும் அதனை சார்ந்த தொழில்களும் முடங்கும்
ஜெயலலிதா அவ்ர்களே விவசாயிகளுக்கு உங்களால் பிரச்சனையானபோது எலிகறி சாப்பிட்டனர்,காஞ்சியில் கஞ்சி தொட்டிகண்டீர்,அவர்களுக்காவது பரவயில்லை,கிரைண்டர் தொழிலாலியின் கதி? அவ்ர்களுக்கு சாப்பிட என்ன கிரானைட் கல்லை சலுகையில் வழங்குவீர்களா?
கோவைமக்களின் மீது உங்களுக்கு என்ன கோபம்? உள்நாட்டு தொழில்களுக்கு ஏன் மூடுவிழாவுக்கு அடிதளம் அமைகிறீர்கள்.
த்மிழ் மக்களே கோவைமக்களுக்காக வருத்தபடாமல் சிந்தியுங்கள்
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக