இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 ஜூலை, 2011

தமிழ் இலக்கணம்


எழுத்து
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர விறுவாய் முப்பஃ தென்ப"
- தொல்காப்பியம்
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே
- நன்னூல்
தமிழ் இலக்கணத்தில் எழுத்து இரண்டு வகைப்படும்
1. முதலெழுத்து
2. சார்பெழுத்து
முதலெழுத்து
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
* உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
* மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இருண்டு வகைப்படும்.
அ, இ, உ, எ, ஒ என்பன முதலெழுத்தில் குறில் எழுத்துகள் ஆகும்,
மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
உயிர் எழுத்துக்கள் - 12
மெய் எழுத்துக்கள் - 18
உயிர்மெய் எழுத்துக்கள் - 216
ஆய்த எழுத்து - 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247
சார்பெழுத்துகள்
உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
-நன்னூல்
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன.
சார்பெழுத்து பத்து வகைப்படும்.

கருத்துகள் இல்லை: