இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 மே, 2011

மின்சாரம்-தமிழக எதிர்காலம்

நண்பர்களே வணக்கம்


மக்களின் பல்வேறு எதிர்பார்புகளுக்கு இடையே பதவி ஏற்றிருக்கும்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கங்களும்,வாழ்துகளும்.
 


இன்று மனிதனுக்கு அடிப்படை உணவு,உடை,இருபிடம்,மின்சாரம்
ஆகவேதான் இதன் தொடர்பான கல்விக்கும்(அடிபடை முதல் ஆராய்சி வரை) ,வேலைவாய்புக்கும் மதிப்பும்,தேவைகளும் அதிகம் உள்ளன.


ஜெயலலிதா அவர்கள் ஐந்தாண்டு முழுமையாக ஆட்சிசெய்து அடுத்த தேர்தலை சந்திக்கும் போதுஅவர்களும் எதிர்கொள்ளும் மக்களின் அத்தியாவசிய பிரச்சனை மின்சாரமாகத்தான் இருக்கும்.ஏனெனில் ஒவ்வொருநாளும் புதிய பெரிய தொழில்சாலைகள் முதல் புதிய வீட்டு மின் இனைப்பு வரை அதிகரித்துகொண்டே போகும்,இதே அளவு மின் உற்பத்தியிலேயே இவை அனைத்தையும் செய்ய இயலுமா?
மின்சாரம் சீராக இருந்தால்தான் சிறுதொழில்களும்,விவசாயமும் சிறப்பாக இருக்கும்,தொழில்துறையும் வளரும்.


ஆனால் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின்சார அளவு --                                  10,214 MW
இது மத்திய மின் பகிர்வு,மற்றும் தனியார் உற்பத்திகளும் சேர்ந்தது,
மேலும்,காற்றாலை மூலம் சுமார் --                                                                         5586 MW,
ஆக தற்போதய மொத்த  மின்சார உற்பத்தி அளவு--                                        15800 MW

தற்போது மின் உற்பத்திக்கு தயாராகி கொண்டிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள்
1.வடசென்னை அனல் மின்னிலையம் நிலை-2 யுனிட் 1&2 (600+600)          1200 MW
2.மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 3 யுனிட் 1--                                            600 MW

பவானி ஆற்றில் கட்டளை அணை நீர் மின் உற்பத்தி 2&3(2*15)-                       60 MW
மேலும் NTPC NORTH CHENNAI (3*500)--                                                                      1500 MW
NLC  தூத்துக்குடி (2*500)--                                                                                                 1000 MW
உடலங்குடி யில் (2*800)                                                                                                  1600 MW
என்னூர் அனல் மின் நிலையம் --                                                                                 600 MW

மொத்தம்--                                                                                                                        6560MW

மேற்கண்ட அனைத்தும் வரும் ஜூன் 2011 முதல் 2014 வருடதிற்குள் அனைத்து மின் நிலையங்களும் உற்பத்தியைய் தொடங்கிவிடும்
அப்போதும் நாம் பெறுவது 22360 MW, இவை அடுத்த ஐந்தாண்டிற்கு போதுமான உற்பத்தி அளவாக இருக்கும? குறைந்தளவு 25000MW தேவை,





எனவே மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதவும் ,மின்சார துறை அமைச்சரான திரு.நத்தம் ஆர்.விஸ்வநாதன் அவர்களும் இதில் சிறப்பு கவனம் செலுத்தி ஏற்கனவே கட்டுமானபணியில் உள்ளவற்றை துரிதப்படுதியும் ,மேலும் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டு அதை செயல் படுத்தி வரும் 2014ல்லாவது கூடுதல் மின் உற்பதியை ஏற்படுத்தினால் மீண்டும் தைரியமாக அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்கலாம்
இல்லாவிடில் மீண்டும் ?.........


ஏனென்றால் மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் ஆட்சியை உங்களிடம் தந்துள்ளனர்


நன்றி


குறைகளை சுட்டிடவேண்டுகிறேன்









கருத்துகள் இல்லை: