இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மே, 2011

மோடியை இந்திய பிரதமராக்களாமா?...

           நாளைக்கு லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்களின் எண்ணிக்கையில் 7 சதவீத சரிவு காணப்படுகிறது. அதேசமயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகலாம் என்று கூறியோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஸ்டார் நீல்சன் கருத்துக் கணிப்பு இதைத் தெரிவிக்கிறது.

மிக மோசமான ஊழல் அரசு 

            2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸுக்கு ஒரே மாதிரியாக செல்வாக்கு சரிந்திருப்பதாகவும் இந்த சர்வே கூறுகிறது. மேலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகளிலேயே மிகவும் மோசமான ஊழல் நிறைந்த அரசு இதுதான் என்றும் சர்வேயில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

7 சதவீத செல்வாக்கு குறைவு

            ஸ்டார் நியூஸ்-நீல்சன் இணைந்து நடத்திய இந்த சர்வே, 28 நகரங்களில் 9000 பேரிடம எடுக்கப்பட்டது. இதில் நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்கள் எண்ணிக்கை 30 சதவீதமாகும். கடந்த பொதுத் தேர்தலின்போது இருந்ததை விட இது 7 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், பாஜகவின் செல்வாக்கு கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அதே 23 சதவீதமாகவே அது இருக்கிறது. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் இன்னும் பெரிய அளவில் திரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பிரதமர் பதவி-4வது இடத்தில் மோடி

             பிரதமர் பதவிக்கு சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு மன்மோகன் சிங்குக்ககே மக்களிடையே ஆதரவு காணப்பட்டது. 21 சதவீதம் பேர் அவரது பெயரைச் சொல்லியுள்ளனர். ராகுல் காந்திக்கு 19 சதவீத ஆதரவும், சோனியாவுக்கு 14 சதவீத ஆதரவும் கிடைத்தது. நரேந்திர மோடிதான் சிறந்த பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்ற கேள்விக்கு நன்றாக உள்ளதாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மோசம் என்று கூறியுள்ளனர்.

விலைவாசி உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு 66 சதவீதம் பேர் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊழல் குறித்த கேள்விக்கு 33 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

கிராமங்களின் நிலை மோசம்

           இந்தியாவில் கிராமங்களின் நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாக 42 சதவீதம் பேரும், விவசாயிகள் நிலைமை மாறவில்லை என்று 43 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

தீவிரவாத மிரட்டல் அதிகரித்திருப்பதாக 44 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பாக செயல்படுவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்வாக்கு சற்றம் குறையவில்லை. அது 47 சதவீதமாக உள்ளது. அவர் சிறப்பாக செயல்படுவதாக இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சனி, 21 மே, 2011

உலகின் இறுதி தீர்ப்பு நாள்!!!,,,

World Endபெங்களூர்: இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும் என்று சொன்னவர்கள் கணிப்பில் டன் கணக்கில் மண் விழுந்தது.

உலகின் எந்தப் பகுதியிலும் மாலை 6 மணிக்கும் அதற்குப் பிறகும் கூட ஒன்றும் நடக்கவில்லை.

டூம்ஸ்டே எனும் பெயரில் இன்று 6 மணியோடு உலகம் அழிந்துவிடும் என்று சொன்னவர் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.

இவரது பேச்சு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போது மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு உலகம் அழிவது உறுதி என்று அவர் கூறினார்.

தான் பணியாற்றும் ரேடியோ நிலையத்தில் நேற்று பணி முடிந்து கிளம்பியபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கை குலுக்கிய கேம்பிங், இதுதான் நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று கூறிய அவர், நாளை மாலையுடன் உலகம் அழியப் போவதால் நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம். நானும் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

எப்படி உலகம் அழியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேம்பிங்கிடம் கேட்டபோது, நியூசிலாந்தில் மிகப் பயங்கரமான பூகம்பங்கள் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்படும். இதனால் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும். இந்த பூகம்பங்கள் நியூசிலாந்தோடு நின்று விடாது. அப்படியே ஒவ்வொரு பிராந்தியமாக நகரும். கடைசியில், உலகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்து போய் விடுவார்கள். 2 அல்லது 3 சதவீத மக்கள்தான் உயிர் பிழைப்பார்கள். அவர்களையும் கூட கடவுள் தன்னுடன் அழைத்துக் கொண்டு விடுவார்.

எனது கணிப்பு மிகச் சரியானது, துல்லியமானது. நோவாவுக்கு கடவுள் 7 நாள் அவகாசம் கொடுத்தார். மாபெரும் வெள்ள அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை அவர் கொடுத்தார். ஆனால் நமக்கு கடவுள் 7000 ஆண்டு காலத்தை அவகாசமாக கொடுத்தார். அந்த காலம் யூத காலண்டர்படி மே 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது என்பார் கேம்பிங்.

ஒன்றும் ஆகவில்லை...

ஆனால் மாலை 6 மணியைத் தாண்டிய பிறகும் உலகம் அழியவில்லை. நியூஸிலாந்து மட்டுமல்ல, வேறு எந்தப் பகுதியிலும் சிறு பூகம்பம் கூட நேரவில்லை. 1994-ம் ஆண்டு மட்டுமல்ல, இந்த ஆண்டும் பொய்யாய்ப் போனது கேம்பிங் கணிப்பு.

இனி 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதிக்கு காத்திருக்கிறார்கள் இதுபோன்ற அழிவுச் செய்திகளில் ஆர்வம் கொண்டோர். அது என்ன 21, டிசம்பர் 2012?

அன்றுதான் உலகின் கடைசி தினமாம். அன்றோடு உலகம் அழிந்துவிடுமாம்! இது மாயா இன மக்களின் பழைய கல்வெட்டுப்படி சொல்லப்படும் கணிப்பாம்.

உலகின் ஆயுளை அவ்வப்போது கேள்விக்குறியாக்குபவர்கள்தான் கடைசியில் காணாமல் போயிருக்கிறார்கள். நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடருவோருக்கே இந்த உலகம் இடம் தருகிறது!!



நன்றி:ThatsTamil

புதன், 18 மே, 2011

அஞ்ஞலி

மே-18 வாழ்வில் மறக்கமுடியாத தினம்
                                  இன்று மன்னில் விதைகளாக ஊன்றப்பட்ட என்னற்ற விடுதலை தியாகிகள்,எம் இன மக்கள் பல இலட்சம் மன்னில் கோரமான முறையில் புதைக்கப்பட்டு,பல்லாயிரமக்கள் குடும்பத்தை இழந்த நாள்..
                               
                                 வீர மரணமடைந்தவர்களுக்கும், மன்னில் மாண்டவருக்கும் வீர வணக்கங்களும் அஞ்ஞலிகளையும் காணிக்கையாக்குகிறோம்

                                                      

செவ்வாய், 17 மே, 2011

மின்சாரம்-தமிழக எதிர்காலம்

நண்பர்களே வணக்கம்


மக்களின் பல்வேறு எதிர்பார்புகளுக்கு இடையே பதவி ஏற்றிருக்கும்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கங்களும்,வாழ்துகளும்.
 


இன்று மனிதனுக்கு அடிப்படை உணவு,உடை,இருபிடம்,மின்சாரம்
ஆகவேதான் இதன் தொடர்பான கல்விக்கும்(அடிபடை முதல் ஆராய்சி வரை) ,வேலைவாய்புக்கும் மதிப்பும்,தேவைகளும் அதிகம் உள்ளன.


ஜெயலலிதா அவர்கள் ஐந்தாண்டு முழுமையாக ஆட்சிசெய்து அடுத்த தேர்தலை சந்திக்கும் போதுஅவர்களும் எதிர்கொள்ளும் மக்களின் அத்தியாவசிய பிரச்சனை மின்சாரமாகத்தான் இருக்கும்.ஏனெனில் ஒவ்வொருநாளும் புதிய பெரிய தொழில்சாலைகள் முதல் புதிய வீட்டு மின் இனைப்பு வரை அதிகரித்துகொண்டே போகும்,இதே அளவு மின் உற்பத்தியிலேயே இவை அனைத்தையும் செய்ய இயலுமா?
மின்சாரம் சீராக இருந்தால்தான் சிறுதொழில்களும்,விவசாயமும் சிறப்பாக இருக்கும்,தொழில்துறையும் வளரும்.


ஆனால் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின்சார அளவு --                                  10,214 MW
இது மத்திய மின் பகிர்வு,மற்றும் தனியார் உற்பத்திகளும் சேர்ந்தது,
மேலும்,காற்றாலை மூலம் சுமார் --                                                                         5586 MW,
ஆக தற்போதய மொத்த  மின்சார உற்பத்தி அளவு--                                        15800 MW

தற்போது மின் உற்பத்திக்கு தயாராகி கொண்டிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள்
1.வடசென்னை அனல் மின்னிலையம் நிலை-2 யுனிட் 1&2 (600+600)          1200 MW
2.மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 3 யுனிட் 1--                                            600 MW

பவானி ஆற்றில் கட்டளை அணை நீர் மின் உற்பத்தி 2&3(2*15)-                       60 MW
மேலும் NTPC NORTH CHENNAI (3*500)--                                                                      1500 MW
NLC  தூத்துக்குடி (2*500)--                                                                                                 1000 MW
உடலங்குடி யில் (2*800)                                                                                                  1600 MW
என்னூர் அனல் மின் நிலையம் --                                                                                 600 MW

மொத்தம்--                                                                                                                        6560MW

மேற்கண்ட அனைத்தும் வரும் ஜூன் 2011 முதல் 2014 வருடதிற்குள் அனைத்து மின் நிலையங்களும் உற்பத்தியைய் தொடங்கிவிடும்
அப்போதும் நாம் பெறுவது 22360 MW, இவை அடுத்த ஐந்தாண்டிற்கு போதுமான உற்பத்தி அளவாக இருக்கும? குறைந்தளவு 25000MW தேவை,





எனவே மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதவும் ,மின்சார துறை அமைச்சரான திரு.நத்தம் ஆர்.விஸ்வநாதன் அவர்களும் இதில் சிறப்பு கவனம் செலுத்தி ஏற்கனவே கட்டுமானபணியில் உள்ளவற்றை துரிதப்படுதியும் ,மேலும் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டு அதை செயல் படுத்தி வரும் 2014ல்லாவது கூடுதல் மின் உற்பதியை ஏற்படுத்தினால் மீண்டும் தைரியமாக அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்கலாம்
இல்லாவிடில் மீண்டும் ?.........


ஏனென்றால் மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் ஆட்சியை உங்களிடம் தந்துள்ளனர்


நன்றி


குறைகளை சுட்டிடவேண்டுகிறேன்