இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்...சிந்திக்கவும்

டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே (வயது 73) கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.


ஜந்தர்மந்தரில் நடக்கும் அன்னா ஹஸாரேவின் இந்த சாகும் வரை உண்ணாவிரதம் இன்ரு 4-வது நாளை எட்டியுள்ளதால், மக்கள் பெரும் கவலையுடன் அவரது நிலையைக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.
  

Anna Hazare

இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் அண்ணா ஹஸாரே. காந்தியவாதி. சமுக இணைய தளங்களிலும் நாடு முழுவதும் இருந்து தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரது இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் முன்வைத்துள்ளார் என்று கட்சிகளுக்கு அப்பால் நின்று குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்தநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹஸாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு மிரண்டு போய் உள்ளது.

இதனை தொடர்ந்து சோனியா காந்தி அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். விரைவில் அதற்க்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சரவைக் கூட்டம் கூட்டி, ஹஸாரேயின் உண்ணாவிரதம் குறித்து விவாதித்தார்.

ஹஸாரோவை தலைவராக்க முடியாது...

அவரது பிரதிநிதிகளாக சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மத்திய அமைச்சர் கபில் சிபிலை புதன்கிழமை நள்ளிரவு இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக உருவாக்கப்படும் கூட்டுக் குழுவில் அரசு தரப்பு, சமூக அமைப்புகள் ஆகியன சார்பில் சரிசமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அந்த குழுவுக்கு ஹஸாரேயை தலைவராக நியமிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், கூட்டுக் குழு அமைப்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றார். இந்த நிலையில் இந்த குழுவுக்கு பிரதமர் அல்லது மத்திய நிதி அமைச்சர் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என அரசு தரப்பு தெரிவித்ததாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறின.

தொடர் உண்ணாவிரதம் குறித்து ஹஸாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

என்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும். எனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார்.

மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒரு தவறான பாதை எனக் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் பிறந்திருப்பார் என நான் நினைக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் கடைசி போக்கிடமாக பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர்தான் இந்த கூட்டுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்படவேண்டும். கூட்டுக்குழுவுக்கு தலைவராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி கூட்டுக் குழு அமையும்பட்சத்தில் அதில் உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.

லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக அமைக்கப்படும் எந்த குழுவிலும் தான் இடம் பெறவேண்டுமானால், அந்த குழுவில் சோனியா காந்தியும் உறுப்பினராக இடம் பெறவேண்டும்," என்றார் ஹஸாரே.

இதற்கிடையே, லோக்பால் கமிட்டி தலைவராக கர்நாடக லோகாயுத சந்தோஷ் ஹெக்டே மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் வர்மா ஆகியோர் இருக்கலாம் என்ற ஹஸாரேவின் ஆலோசனையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.



நன்றி: One India Tamil



செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தமிழா!..

அதிபராடா நீயெல்லாம் ?....


கொழும்பு: இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.


இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சேவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.

அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்சே. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.

அவர் பேசுகையில், கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.

தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள். எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.

முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பறியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.



இதை வாசிக்கும்போது யாருக்கேனும் எரிச்சலோ கோபமோ வந்தால் நாம் தமிழ்ர்தான் என என்னுகிறேன்
ஒரு நாட்டின் அதிபர் சிறுபிள்ளை தனமாக எவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் இருக்கிரார் என எடுத்து காட்டுகிறது இவரது கருத்து,


முரளி தமிழன் என்பதால் நாடு அவருக்கு கடமைப்பட்டுள்ளது என்று ஏனய்யா தமிழனை கூறுகிறாய்,அவரும் உன் நாட்டுக்காகத்தானே விளையாடினார்


மேலும் தமிழ் நாட்டிலிருந்து அஸ்வின்னு ஒருத்தர் இந்திய அணியில் உள்ளார்
தமிழக அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளவில்லை,தமிழக கிரிகெட் அணியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை,அட தமிழ் நாளேடுகள் கூட ஒரு செய்தி வெளியிடவில்லை,ஆனால் இவர் இரண்டாவது காலிருதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்து வீசி வாட்சனை 25 ரன்னுக்கும் பாண்டிங்கை 104 ரன்னிலும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடதக்கது
எப்போதுதான் உள்ளூர்காரனை மதிப்பார்களோ தெரியவில்லை

சனி, 2 ஏப்ரல், 2011

எங்கே போனது தன்மானம்?.........

                             இன்று உலக கோப்பை கிரிக்கெட்டை பார்க்க வந்த ராஷபக்‌ஷேவை கடுமையாக தமிழ்நாட்டில் எதிர்த்தார்களா என்றால் இல்லை என மார்தட்டிக்கலாம்
               அட எங்கே போனது தமிழனின் தன்மானமும் போர்குணமும்!


ம.தி.மு.க வும்,திருமாவளவனும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,
எம் தமிழ் மக்களை கொலைசெய்த ஒரு போர்குற்றவாளி எந்த மக்களுக்கு எதிராக செய்தானோ அவர்கள் மண்ணில் சர்வசாதரனமாக வந்து இறங்கி,சொகுசு மகிழூந்தில் மறுநாள் (இன்று)திருப்பதி வெங்கடேசனிடம் இலங்கை கிரிகெட்டில் வெற்றி பெற வேண்டிக்கொண்டு மும்பை செல்கிறான்.
   கோவையில் மட்டும் எதிப்பு தெரிவித்த ம.தி.மு.க.வினர் கைது செய்யப்படுகிரனர்.
கர்நாடகாவில் எதிர்த்த தமிழர் கைது செய்யப்படுகிறனர்
அய்யா சீமான் அவர்களே,பழநெடுமாறன் அவர்களே,கவிஞர் தாமரை அவர்களே நீங்கெள்ளாம் என்ன செய்கிறீர்கள்.
உங்கள் பேச்சும் வீரமும் ஏமாந்த எம்மக்களிடம் மட்டும் தானா?
ஏன் நீங்கெள்லாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
அந்த கொடும்பாவி வந்து தமிழ்நாட்டில் தங்கும்போதோ அல்லது வழி நெடுகிலுமா உங்களால் எதிர்ப்பு காட்ட முடியவில்லை!!


கடந்தமுறை லண்டனுக்கும் ,அமெரிக்காவுக்கும் சென்றபோது அங்கு தமிழ்ர்கள் காட்டிய எதிர்பாலும் கோஷத்தாலும் துண்ட கானம் துணியகானமுனு ஓடிபோனான் இதே ராஷபக்‌ஷே !


இங்கு தமிழ் நாட்டில் பார்க்கும் போது நம் தமிழரினம் மெல்ல கரைந்துகொண்டிருக்கிரது,சூடு சொரனை இல்லாமல் திரிகிறோம்


கருணாநிதி கூட்டத்திற்க்கும்,ஜெயலலிதா கூட்டத்திற்க்கும் ஓட்டு பொறுக்குவதிலேயே கவனம் உள்ளது.


மக்களே நாம் தமிழர்கள் ,நமக்கென சரித்திரம் உண்டு ,தன்மானம் உண்டு,வீரம் உண்டு,
எப்போதுதான் விழிப்பீர்!


இலவசங்களில் கனவு காணாமல் நம் இனத்தை அழித்தவனை நாட்டைவிட்டு வெளியேற குரல் கொடுங்கள்,
விளயாட்டு வேறு!,தன்மான உனர்ச்சிகள் வேறு,விளையாட்டை பார்க்க வந்தானு வேடிக்கைபார்காதிர்கள்,


சீமான்,பழநெடுமாறன் போன்றோர் இனியும் தமிழர் இயக்கம் என்று போலி வேடம் போடவேண்டாம்
எம்மக்களை காப்பாற்ற ஒருவன் வருவான்
அதுவரை தமிழர்களே ஜாலியா கிரிகெட் பாருங்கள்


வாழ்க நம் தமிழர் இனம்!