இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 மார்ச், 2011

நாம் இந்தியர்,...



அன்பு தோழர்களே !
அனைவருக்கும் வ்ணக்கம்.
இந்தியவின் பெருமை நமது ஜனநாயகம்,யாராலும் மறுக்கமுடியாத உன்மை!,பல்வேறு மொழிகள்,இனங்கள்,மதங்கள்,பழக்கங்கள்,பழைய நடைமுறைகள்,அதற்கானசட்டதிட்ட்ங்கள் இப்படி பாரம்பரியம் நெடும்பயணம் நீண்டுகொண்டு போகிறது...

இவ்வாறு பரந்து விரிந்துள்ள நம்மக்கள் அனைவருக்கும் வாழ அதற்கு தேவையான வசதிகளை செய்து தந்து பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ அதற்கான கட்டமைப்பை நிர்வாகம் செய்யவும் நாமே நமது பிரதிநிதிகளை அமர்த்துகிறோம்.இவ்வாறு நாம் அமர்தும் பிரதிநிதிகள் சமுதாயத்தில் ஒழுக்கமானவர்களாகவும்,திறமையானவர்களாகவும் உலக அறிவு உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் .
 தற்போது நம்மை நிர்வாகம் செய்தவர்கள்,செய்பவர்கள் அவ்வாறு உள்ளார்களா என்பது அனைத்து மக்களும் நன்கு அறிவர்கள், நாம் சாதரனமாக வேறு வழியில்லாமல் பழக்கடையில் தேவைபடும் பழம் வாங்கும் போது அனைத்தும் சொத்தை,அதில் எது ஓரளவுக்கு நல்லதோ அதையே தேர்ந்தெடுப்போம்.அதேபோலத்தான் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் எவன் ஒருவன் சிறந்தவனோ அவனையே தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
உலக நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்வது,பகமை கொள்வது,அவர்கள் நம்மக்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் போது கண்டிப்பதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதற்க்கும் இந்தியா முழுமையும் நிர்வாகம் செய்யும் நடுவன் அரசுக்கே உரிமைஉண்டு,அதனால்தான் இன்றுவரை நாம் தந்தி அனுப்பிக்கொண்டிருக்கிறோம் நம் தமிழர்களாக்காக!
மத்தியிலும்,மாநிலத்திலும்(தமிழ்நாடு அல்ல) தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் சிறப்பாக 
செயல்படுகிறதா?,மக்களை பாதுகாக்கிறதா?
இந்தியாவின் ஒருபழம்பெருமைவாய்ந்த ஒருஇனத்தையே அண்டைநாட்டில் இலங்கையில்
அடியோடுஅழித்தொழிக்க அனைத்து உதவிகளையும் செய்து அதற்கு ஆயிரம் காரணங்களையும் 
கூறி ஞாயப்படுத்திக்கொள்கிறது.
தமிழ் மன்னில் இருந்து அன்றாடம் வாழ வாழ்வின் ஆதாரங்களை தேடி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்களை தமிழர் என்கிற ஒரே காரணத்திற்காக மனிதர்கள் என்றும் பாராமல் வன்கொடுமை செய்து சுட்டு தள்ளுகிரார்கள் சிங்கள இராணுவத்தினர்.இந்தியாவில் எங்கேனும் இயற்கை சீற்றத்தால் அழிவு,தீவரவாதிகளால் அழிவு எனும் போது நாம் அனைவரும் இந்தியர் என்று கூறி தேவையான நிதிஉதவி ,பொருள் உதவிகள் என முதல் ஆளாக செய்கிறோம்,ஆனால் தமிழர்களுக்கு என குரல் கொடுப்போர் எவருமில்லை. காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டு துரோகியான EVKS இளங்கோவன் போன்றோரின் தமிழினத்துக்கு எதிரான அறிக்கைகள் அவர்கள் நம்மை எவ்வாறு மிதிக்கிறார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டும்.
 தமிழினத்தை அழித்த காங்கிரசை,தமிழ் மீனவர்களை காத்திட மறுக்கும் காங்கிரசை!தமிழ் மன்னில் ஆட்சி செய்யதுடிக்கும் காங்கிரசை,தமிழ்மன்னில் திராவிட கட்சிகளின் மேல் சவாரி செய்யும் காங்கிரசை,ஆயிரம் கோஷ்டி பூசல் உள்ள காங்கிரசை,நிலையற்ற காங்கிரசை தமிழ் மன்னில் இருந்து வேரோடு,வேரடிமன்னோடு 
 மக்களே தூக்கி எறியுங்கள்.கறைபடியாத கை, நேர்மையானவர்கள்  என் கூறிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்களே ஏன் திராவிடர்களுடன் தமிழர்களுடன் ஆட்சியில் கூட்டனிகேட்டு இத்தனை பிரயத்தனப்ப்டுகிறீர்கள்,உங்களுக்கு எங்களை நிர்வாகம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?
மேற்கு வளைகுடா நாடுகளில் கடுமையான கட்டுபாடுகள் அடக்கு முறைகளை மீறி 
மன்னராட்சியை எதிர்த்து கிளர்சி நடைபெறும்போது ஜன்நாயக நாட்டில் 
மிகவும் எளிது.....







மீண்டும் தொடர்வேன்!,தவறுகளிருந்தால் சுட்டிகாட்டுங்கள்,திருந்த வாய்பளியுங்கள்...!!!

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
( குறள் எண் : 544 )





மு.வ : குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
சாலமன் பாப்பையா :
 குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் 
சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

2 கருத்துகள்:

kalai சொன்னது…

nalla erukku

vijaykarthik சொன்னது…

நன்றி கலைஅவர்களே