படித்ததில் பிடித்தது,,,,,,,,,,,,,!!
என்னுடையது என்று நினைத்துதான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்..
ஆனால்
முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி..
எனினும்
அதிகவேக இரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.
இந்த மலையைக் குடைந்து
இரயில் பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்று.!
நான் நல்லவன் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையைத் திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே மனசு.
எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்.
பார்க்கவில்லையெனில்
பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.!
உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்து பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.
எப்போதும்
சுரிதாரிலேயே பார்த்த உன்னை
முதல்முறை சேலையில் பார்த்தபோது....
அய்யோ அந்த சேலை
உன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறதே.
நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ
உன்னை பார்க்கமுடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருக்கிறது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து.
எல்லாப் பெண்களும்
உதட்டை அழகாய்க் காட்டுவதற்காக
உதட்டு சாயம் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான்
உதட்டின் அழகை மறைத்துக்கொள்வதற்காக
உதட்டு சாயம் பூசிக்கொள்கிறாய்.
துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியா இருக்கிறது
என் இதயத்திற்க்கு
புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன்.
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்..
முதல் முறை
உனது வீட்டிற்கு வந்தபோது
நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது
உனது அறையிலிருக்கும்
ஆளுயரக் கண்ணாடியைத்தான்
ஏன்?
இத்தனை நாளும்
உன் அழகையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தும்
விரிசல் ஏதும் விழாமல்
அப்படியே இருக்கிறதே!!
உன்னை ஏன்
இப்படிக் காதலித்துத் தொலைகிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி
தொலைபேசியில் எல்லாம்
நீ என்க்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
என்க்கு தருகிறது
ஏற்கனவே பூத்த பூதான்
ஆனாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே!!
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைத்தாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே ...!!
அன்மையில் என் அன்புதோழமை
தந்த கவிதை தொகுப்பு..

நன்றி
அன்புடன்
விஜய்
என்னுடையது என்று நினைத்துதான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்..
ஆனால்
முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி..
எனினும்
அதிகவேக இரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.
இந்த மலையைக் குடைந்து
இரயில் பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்று.!
நான் நல்லவன் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையைத் திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே மனசு.
எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்.
பார்க்கவில்லையெனில்
பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.!
உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்து பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.
எப்போதும்
சுரிதாரிலேயே பார்த்த உன்னை
முதல்முறை சேலையில் பார்த்தபோது....
அய்யோ அந்த சேலை
உன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறதே.
நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ
உன்னை பார்க்கமுடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருக்கிறது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து.
எல்லாப் பெண்களும்
உதட்டை அழகாய்க் காட்டுவதற்காக
உதட்டு சாயம் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான்
உதட்டின் அழகை மறைத்துக்கொள்வதற்காக
உதட்டு சாயம் பூசிக்கொள்கிறாய்.
துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியா இருக்கிறது
என் இதயத்திற்க்கு
புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன்.
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்..
முதல் முறை
உனது வீட்டிற்கு வந்தபோது
நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது
உனது அறையிலிருக்கும்
ஆளுயரக் கண்ணாடியைத்தான்
ஏன்?
இத்தனை நாளும்
உன் அழகையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தும்
விரிசல் ஏதும் விழாமல்
அப்படியே இருக்கிறதே!!
உன்னை ஏன்
இப்படிக் காதலித்துத் தொலைகிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி
தொலைபேசியில் எல்லாம்
நீ என்க்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
என்க்கு தருகிறது
ஏற்கனவே பூத்த பூதான்
ஆனாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே!!
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைத்தாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே ...!!
அன்மையில் என் அன்புதோழமை
தந்த கவிதை தொகுப்பு..

நன்றி
அன்புடன்
விஜய்
2 கருத்துகள்:
பகிர்வுக்கும் படைப்பாளருக்கும் நன்றி.
நன்றி திரு கருணாகரசு அவர்களே
கருத்துரையிடுக