இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

படித்ததில் பிடித்தது ** நீங்களும் ஒரு வழிகாட்டியே!. . . .


நீங்களும் ஒரு வழிகாட்டியே!. . . .!
எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வழிகாட்டிகள் யாராக இருக்க வேண்டும்?, வழிகாட்டிகளை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால் பின்வரும் கேள்விகளுக்கு கண்டிப்பாக விடை தெரிந்திருக்கவேண்டும்.
v  வழிகாட்டுதல் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியுமா?
v  வழிகாட்டுதலுக்கு நாம் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம்?
v  சரியான நபரைத்தான் நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோமா? நமக்கு வழிகாட்டுபவர்கள் நல்ல விஷயாதிகளா அல்லது ஞானம் உள்ளவர்களா?
v  எப்போதாவது நமது மனம் ஏததவதொரு சந்தர்ப்பத்தில் குழப்பமடையும்போது, வழிகாட்டுபவர்கள் மேலும் நம்மைக் குழப்பமடையச் செய்யாமல் சரியான தீர்வை கொடுப்பவர்களாக் இருக்கிறார்களா?

    நாம் ஒரு அதிமுக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, சரியான முடிவை நம்மால் காணமுடியாத நிலையில், அவ்வேலையில் ஊக்கம் குறைந்து, சோர்வு, தயக்கம், தள்ளிப்போடுதல் போன்றவைகளால் குழப்பமுற்றிருக்கும்போது நமது “வழிகாட்டிகளை அணுகி அல்லது அவரை நினைத்து அவ்வேலையை திறம்படச்செய்து முடித்துவிடுவோம். இம்மாதிரி வழிகாட்டிகளை ‘ROLLMODEL’ என்றுகூட மனதில் இறுத்திக்கொண்டு அவர்களது வழியை நாமும் பின்பற்றலாம். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் நல்ஆலோசனைகளை வழிகாட்டுபவர்களிடமிருந்து அனுதினமும் ஏதாதொரு விஷயத்திற்காகப் பெற்றுக்கொண்டுதானிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இப்படி இல்லை என்று கூறுபவர்கள் மிகச்சிலரே.

குழந்தைகளின் மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள், வீடுகட்டுதல், திருமணம் மற்றும் இதர சுபகாரியங்கள் இவை அல்லாது குடுப்பத்திலோ, பணிபுரியும் அலுவலகத்திலோ, தொழில் சம்பத்தப்பட்ட ஏதாவதொரு ஒரு சிக்கலான சமயத்தில் சரியான பாதை தெரியாமல் தவிக்கும்போது நம் எல்லோருக்கும் தேவை  வழிகாட்டிகளின் ஆலோசனைகள் மட்டுமே. இம்மாதிரியான பல சந்தர்ப்பங்களில் நாம் தேடவேண்டியது பெயின்கில்லரும், தலைவலி அல்லது தூக்கமாத்திரை போன்றவை அல்ல, ஒரு சரியான வழிகாட்டியைத்தான். சரியான சமயத்தில் இவர்களை அணுகும்போது, உறுதியாக நாம் பெறவேண்டியதை கண்டிப்பாகப் பெற்றுவிடமுடியும் என்பதே என் கருத்து மற்றும் அனுபவத்தில் கண்ட உண்மை.

ஒவ்வொரு மனிதனுக்கும் மாதா, பிதா, குரு இவர்கள் என்றுமே வழிகாட்டிகள்தான். சில விந்தை மனிதர்களுக்கு இயற்கை கூட வழிகாட்டிகள். சிந்தனையாளர்களுக்கும், அறிவாளிகளுக்கும்,  பார்ப்பது, அனுபவிப்பது என்று எல்லாமே வழிகாட்டுதலுக்குள் அடக்கம். வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலைக்குச் சென்றவர்களை, உங்களது வழிகாட்டிகள் யார் என்று கேட்டால், தங்கள் பள்ளி, கல்லூரி நாட்களில் தங்களுக்கு நல்ஆசிரியர்களாக அமைந்தவர்களைக் கூறுவதுண்டு. நமக்கு உற்ற நண்பர்கள், நல்ல புத்தகங்கள், இன்றைய உலகில் இணையதளங்கள், இமெயில்கள் போன்றவைகூட சிலசமயங்களில் வழிகாட்டியாக அமைந்துவிடுகிறது.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் சில விஷயங்களில் வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு காரணமாக இருப்பதும் ஒரு உதாரணம். ஒரு முறை மிகப்பெரிய லிஃப்ட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தொடர்ந்து சரிவை எதிர்நோக்கியது. அதற்கான காரணம் என்னவென்றால், லிஃப்டை பயன்படுத்துபவர்கள், லிஃப்ப்டில் உள்ள சிறுசிறு கோளாறுகளையும், மெதுவாகச் செல்வதையும் முன்னிருத்தி அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார்கள். லிஃப்டில் ஏறியவுடன் இது போன்ற சிறிய விஷயங்கள் அவர்கள் சிந்தனையில் பூதாகரமாகத் தோன்றியதே இதற்குக் காரணம். இக்குறையை நிவர்த்தி செய்ய அரும்பாடுபட்ட அந்தக் கம்பெனியின் முதலாளிக்கு அவரது மனைவி சொன்ன சில திருத்தங்களே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அவரது ஆலோசனையின் அடிப்படையில், லிஃப்ட்டின் நான்கு புறங்களிலும் விதவிதமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. அக அழகைக் காணமுடியாத மனிதர்கள், தங்கள் புற அழகை ரசிப்பதற்கே அதிகம் விரும்புவார்கள் என்பதுபோல, லிஃப்டைப் பயன்படுத்துபவர்களும் தங்களின் புற அழகை ரசிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார்கள். லிஃப்டில் உள்ள சிறிய கோளாறுகள் அவர்கள் கண்ணிலிருந்து விலகியது  என்பதுதான் அந்த ரகசியம். சிறிய மாற்றங்களால், அக்கம்பெனி சகஜ நிலைக்குத் திரும்பியது. மனைவியின் வழிகாட்டுதலால்கணவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அவருடைய பெயர் ஓட்டிஸ் என்றும், அந்தக் கம்பெனிதான் Votis Elevators என்றும் எனது மதுரை நண்பர் சொல்லித் தெரிந்துகொண்டேன்.
   
மனிதனால் உருவாக்கப்படும் வாகனம், வாஷிங்மெஷின், அவென், குளிர்சாதனப்பொருட்கள் இதர பொருட்களை இயக்குவதற்கே வழிகாட்டுதல் தேவைப்படும்போது, இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்கு நன்மை மற்றும் தீமைகளை அறிய வழிகாட்டுதல் என்பது மிகவும் அவசியமாகிறது. நற்குணங்களோடு பிறக்கும் மானுடர்கள், சில சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறுவதை அனுபவத்தில் காண்கிறோம். நன்மைகளையும், இன்பங்களையும் மட்டுமே விரும்பும் மனிதர்கள், சிலசமயங்களில் தீயசெயல்கள் என்று தெரியாமல் அதைத் தேர்ந்தெடுக்கும்போது, தக்க தருணத்தில் சரியான வழிகாட்டுதலால், இச்செயல்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் பக்குவப்படவும், தன்னை நல் வழிப்படுத்திக்கொள்ளவும் வழிகாட்டுதல் என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.
           
    இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். நாம் என்றைக்காவது, யாருக்காவது உதவியிருக்கிறோமா அல்லது வழிகாட்டியிருக்கிறோமா? என்ற கேள்வி எழும்போது பின்வரும் வரிகளை நினைவு கூர்ந்தால் ஓரளவுக்கு நாம் மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதே இவ்வஞ்சலின் நோக்கம்.

எனது அபிமான எழுத்தாளர்களுள் ஒருவரான ராகிர அவர்கள் எங்கோ சொன்ன/எழுதிய ஒரு கருத்தை, இன்னும்  கொஞ்சம் விரிவாகஇச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்தி அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு வயதான மனிதர் அறிவாளியும், அனுபவசாலியும் கூட, சமவெளியில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்.  அவரது மனதில் பல விதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அங்கே வயல்வெளியில் இரண்டு குதிரைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒன்றின் கழுத்தில் ஒருவித மணிகட்டித் தொங்கவிடப் பட்டிருக்கிறது.  மணி கட்டிய குதிரை அவ்வப்போது தலையை ஆட்டும், அப்போது மணி எழுப்பும் ஒலி கேட்கும்,  பிறகு மேய்வதற்காக கொஞ்சம் இடம் மாறும். பக்கத்தில் மேய்கின்ற குதிரை அப்படியே அதனைப் பின் தொடரும். 

இப்படி மணி கட்டிய குதிரை இடம் நகரும் போது ஒரு இடத்தில் ஒரு பெறிய பள்ளத்தைத்தைத் தாண்டாமல் லாவகமாக அதன் கரை ஓரமாக சென்று கடக்கிறது.  தலையைச் சாய்த்து மேய்வதைத் தவிற வேறோன்றும் அறியேன் என்கிற இரண்டாவது குதிரையும் அப்படியே செய்கிறது.

இந்த சம்பவத்தை அந்த பெரியவர் நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார்,   இதில் ரசிப்பதற்க்கு என்ன இருக்கிறது என்று நம்மைப்போல் சாமானியர்களுக்குத் தோன்றும், ஆனால் அந்த அறிவாளியான பெரியவர், வேறு விதமான சிந்தனையுடன்  சற்று அருகில் சென்று கூர்ந்து கவனிகிறார். அவருக்கு ஒரு உண்மை புலப்படுகிறது, அந்த இரண்டாவது குதிரைக்குக் கண் தெரியாது.

உடனே அந்த பெரியவரின் எண்ண அலைகள் குதிரையைப் போல் பாய்கின்றன.  ஒரு ஐந்தறிவு படைத்த ஜீவனே மற்றொன்றுக்கு வழிகாட்டியாக உள்ளனவே,  ஆறறிவு பெற்ற நாம், நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களையும், கேட்டதையும், படித்ததையும் மற்றவருக்கு சொல்லி ஒரு வழிகாட்டியாக இருப்போமானால், இந்த உலகம் எப்படி இருக்கும் என்று நினைத்து, அன்றிலிருந்தே பார்ப்பவர்களையெல்லாம், பிறருக்கு “வழிகாட்டியாக இருங்கள்” அறிவுறுத்தத் தொடங்குகிறார்.

கடைசியாக,
உங்கள் வழிகாட்டி யார்?
நீங்கள் யாருக்கு வழிகாட்டி. . .
என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்?
பதில் இல்லையென்றால்!. . . . . .. . . . . .
இனி நாமும் நமக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்துகொண்டு தக்க சமயத்தில், ஏதாவதொரு விஷயத்தில் மற்றவருக்கு ஒரு வழிகாட்டியாகச் செயல்பட முயற்சிப்போமா?. . . . . . ..




நன்றி : ஜான் ஐயா
எனக்கு வழிகட்டி: என் அம்மா, லூயிஸ் ஐயா,குமார் ஐயா

சனி, 22 ஜனவரி, 2011

குடியரசு தின வாழ்த்துக்கள்

 
62` வது இந்திய குடியரசு தினம் அனைவருக்கும்  வாழ்துக்கள்

             ஜம்மு காஷ்மீர் புவியின் சொர்க்கம் என்று உலகம் அழைகிறது

             இந்தியாவின்  வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம் இது.
.இமயமலை தொடர்ச்சியில்அமைந்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம்.வடக்கிலும்கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞசாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. ஜம்மு,காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பகுதிகளை கொண்ட மாநிலமாகும். 
          
           ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், லடாக்கில் பெளத்தர்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். 

          இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த காஷ்மீர் மாநிலம், சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி ஜம்முகாஷ்மீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்றே குறிப்பிடுகின்றனர்இந்தியவில் உள்ள ஒரு மாநிலம்தான் இது.
 

           எந்த ஒரு குடியரசு நாட்டிலும் குடியுரிமை உள்ளவன் அவன் தாய்நாட்டின் கொடியை தன் இல்லதில் ஏற்ற உரிமை உண்டு.இது ஆதிகாலம் 
முதல் வழக்கத்திலுள்ளது.

politics
            ஜம்மு:நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு என, காஷ்மீர் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தையடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய மத்திய அரசு 
பார்வையாளர்கள் சிலரை அனுப்பியுள்ளது.

        குடியரசு தினத்தன்று பாரதிய ஜனதா கட்சியினர் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கு மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
            இது குறித்து பார்வையாளர் குழுவின் தலைவர் படோங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்ற இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு. பாரதிய ஜனதா கட்சியை லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்க வேண்டும். காஷ்மீர் வன்முறை குறித்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தாலும், பா.ஜ.,வின் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது.
          காஷ்மீர் மக்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இந்த மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும், என ஆவல் கொண்டுள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து இம்மாநில மக்கள் இருவேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். இது குறித்து ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் விவாதிக்கப்படும்.காஷ்மீரை இரண்டாகவோ, மூன்றாகவோ பிரிக்க இம்மாநில மக்கள் விரும்பவில்லை.


           ஒன்று பட்ட காஷ்மீரை தான் விரும்புகின்றனர்.பாகிஸ்தானிலிருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக சரக்குகளோ, மக்களோ வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது, என இம்மாநில மக்கள் 
விரும்புகின்றனர்.இவ்வாறு படோங்கர் கூறினார்.

             சற்றெ வரலாற்றினை பின் நோக்கினால் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை முதன்முறையாக மொகலய பேரரசர் அக்பர் 1586 ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ்,முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த துருக்கிய ஆட்சியாளரான யூசூப் கான் படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் இராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட இந்து தேவதையான ஜம்வா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார்.

          1780 ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், ஜம்மு காஷ்மீர் பகுதி சீக்கியரால், ரஞ்சித் சிங் 
என்பவரால் பிடிக்கப்பட்டது.
         ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது.இந்தியப்பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாக செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மிறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஷ்மீரை தாக்கி கைப்பற்ற முயன்றனர்.ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்து போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது.இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது.ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைபற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.
            இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் அரசாங்க உறவுகள் பாதிப்படைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்கள் காசுமீர் பகுதியில் நடந்துள்ளன. அவையாவன, இந்திய-பாகிஸ்தான் போர் 1965, வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் கார்கில் போர். முந்தைய காஷ்மீர் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியை பாக்கிஸ்தானும், 1962 ஆம் ஆண்டுக்கு பின் 10 விழுக்காடு பகுதியை சீனாவும் நிர்வகிக்கின்றன.



                                                                                                                                                                                                                                    இந்த சமுதாயத்தை சீரழிக்கும் அரசியல் கட்சிகளின்கொடியும்,கலாச்சாரத்தை குழிதோண்டி புதைக்கும் நாயகர்களின் கொடியும் தன் வீட்டின் கூரையில் ஏற்ற இந்தியனுக்கு இந்திய குடியுரிமை சட்டம் அனுமதிக்கும் போது இந்திய தாய் திருநாட்டின் கொடியை இந்தியவில் ஏற்ற ஏன் இத்தனை வன்முறைகள்?      இத்தனை பஞ்சாயத்து?     






                                                                                     

        
             
       




















               
                                                          









வெள்ளி, 21 ஜனவரி, 2011

மழை!!!


கவிகள் குழந்தையின் சிரிப்பு,யாணை,கோவில்கோபுரம்,கடல் இதுபோன்றவைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம் என்பர்!

அதுபோல் தான் மழையும்

துபாயில் மழை! மழை!!
பஞ்சு மேகங்கள் உலகின் உயர்ந்த கட்டிடத்தை மெல்ல தழுவி சென்று தூரல்
போட்டுக்கொண்டு இருக்கிறது
 

இயல்பான வாழ்கை பாதிக்கும். இரண்டு நாள் மழை நீடிக்கும்.ஒரே ஜாலிதான்

நத்தை போல ஊரும் வாகணங்கள், ஆஹா ,இதையும் ரசிக்கலாம்
















வியாழன், 20 ஜனவரி, 2011

சங்கமேஸ்வரர்-பவானி



பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்தநதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும்கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம்  வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைனவ  ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
மேலும் கோவிலின் உள்ளே கல்லால் ஆன சங்கலியும் அதன் கீழே தாமரை மொட்டும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
வேதநாயகியின் பிரகாரத்தில் இரு சிலைகள் மீது நீர் ஊற்றும் போது ஒன்று சிரிக்கவும் ஒன்று கண்ணீர் வடிப்பது போலவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன. ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர்  தனது திருபுகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர்  இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை  இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.
இங்கு பிரதோஷத்தன்று நந்தியின் வழிபாடு ஓதுவார்களின் கணீரென்ற குரலில் திருமறைகள் ஓத சிறப்பாக இருக்கும்.
சத்தி குழுமத்தின் மூலம் ஆடி மாதம் நடைபெறும் இலட்சார்சணை  மிகவும் சிறப்பான நிகழ்சியாகும்.
மேலும் அடுத்த இடுகையில் 
நன்றி-
அன்பர்கள் பின்னூட்டம் இடவும்
தவறுகளை திருத்திக்கொள்ள சந்தர்பம் தரவும்



வலைப்பதிவோருக்கு வணக்கம்,

அனைவருக்கும் வணக்கம்
தை பூசத் திருநாளில் வலைப்பதிவில் இணைந்துள்ளேன்
எனது பணி சிறப்பாக் செய்ய எல்லாம் வல்ல விநாயகர் அருள் புரிய வேண்டுகிறேன்.